Posts

Showing posts from December, 2019

ஹாய்..

வணக்கம் வாசக தோழமைகளே..! எனக்கெனப் பெய்யும் மழை நிறைவை எட்டிக் கொண்டிருக்கிறது. உங்களின்  வாசிப்பில் விரியும் எண்ணங்களை பகிர்ந்தால் மகிழ்வேன். நன்றி..! என்றும் அன்பில்.. மீனு.  

mazhai - 14

Image
மழை – 14 திரையில் விரிந்த காட்சிகளை பூங்கொடி நம்ப முடியாமல் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை சுற்றி கேட்டுக் கொண்டிருந்த அத்தனை உற்சாக ஒலிகளையும் கடந்து, அவள் தொலைக்காட்சி பெட்டியில், கையில் ஒட்டியிருந்த மாவுத் துகள்களை தட்டி விட்டு நடக்கும் மகிழனோடு லயித்திருந்தாள். வீட்டிலிருந்த அத்தனை அலைபேசிகளும் ஒன்று போல அலறிக் கொண்டிருக்க, அவள் அண்ணன்மார்களும், அண்ணிமார்களும் குரலில் அதீத பெருமையோடு பதில் கொடுத்துக் கொண்டிருந்தனர். பூங்கொடியின் அலைபேசியும் அலறிக் கொண்டு தானிருந்தது. ஆனால் அதை அவள் தற்சமயம் கண்டுக் கொள்ளும் மன நிலையில் இல்லை, ஏனெனில் அவளுக்கு நடப்பது கனவா..? நனவா..? என்ற சந்தேகம் நிறைய இருந்தது. புறத் தூண்டல்களுக்கு பதில் கொடுக்க சென்றால், எங்கே இந்த அழகிய கனவு கலைந்திடுமோ என்று அவள் தன் விழிகளை தொலைக்காட்சி பெட்டியிலேயே பதித்திருந்தாள். “தங்கப் பொண்ணு.. மாப்பிள்ளை உன்கிட்ட பேசணுமாம்..’’ என்று மருது பாண்டி அலைபேசியை நீட்டும் போது, உயிர் பெற்ற சிலை போல கை நீட்டி அந்த அலைபேசியை பெற்றுக் கொண்டாள். “கொடி..’’ அவன் அழைப்பில் உள் உறையும் உயிர...

mazhai -13

Image
மழை – 13 மகிழன் பூங்கொடி அனுப்பி இருந்த அந்த புலனச் செய்தியை எத்தனையாவது முறை வாசிக்கிறான் என்ற கணக்கில்லாமல் மீண்டும் வாசிக்க தொடங்கினான். நேற்று இரவு சரியாய் பதினொன்று ஐம்பதிற்கு அனுப்பி இருந்தாள். அந்த நொடி முதல், இதோ இந்த நிமிடம் வரை மீண்டும், மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அலைபேசியை கையில் எடுத்து அந்த செய்தியை வாசிக்க துவங்கிவிடுவான். இப்பொழுதும் அது போன்ற ஒரு நிமிடமே. ‘நான் சென்னை கிளம்பிட்டேன். உங்ககிட்ட நேர்ல சொல்லிட்டு, பையிங் கிஸ் கொடுத்துட்டு கிளம்பனும்னு இருந்தேன். ஆனா நேத்து சாயங்காலம் நடந்த விஷயம் எல்லாத்தையும் மாத்திடுச்சி. உங்க பிரச்சனை என்னனா நீங்களா ஏதாவது ஒரு கம்போர்ட் சோனை செலக்ட் பண்ணிட்டு கடைசி வரை அதுல இருந்து வெளிய வர பயந்து அது தான் உங்க உலகம்னு நம்ப ஆரம்பிச்சுடுறீங்க. நீங்க நர்சரியில இருந்து வெளிய வர மாட்டேன்னு அடம் பிடிச்ச அதே ஐஞ்சு வயசு குட்டி பையனாவே இன்னும் இருக்கீங்க. அதான் உங்க பிரச்சனை. மத்தவங்க எண்ணத்தை பிரதிபலிக்க நாம வாழக் கூடாது மாமா. நாம நமக்காக வாழனும். எல்லாமே இருந்து ஒன்னும் இல்லைன்னு ஏங்குற மனுசங்க மத...

mazhai - 12

Image
மழை – 12 இன்னும் அரை மணி நேரத்தில் நீச்சல் வகுப்பிற்கு கிளம்ப வேண்டும். ஆனால் ஏனோ பூங்கொடிக்கு அந்த வகுப்பிற்கு கிளம்ப அவ்வளவாய் விருப்பம் இல்லை. போட்டிகளுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்க, இவளின் பயிற்சியாளரோ பூங்கொடியை பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தார். தினமும் காலை இரு மணி நேரமும், மாலை இரு மணி நேரமும் நீச்சல் குளத்திலேயே முங்கி இருக்க வேண்டிய அவசியம் நேரிட்டது அவளிற்கு. மறுபுறம் மகிழனின் அலுவலகத்தில் வருடாந்திர தணிக்கை நடை பெற்றுக் கொண்டிருக்க, அவனை கண்ணில் காண்பதே வெகு அறிதாய் இருந்தது. அன்றைக்கு மதுவின் ஆதிக்கத்தில் இருவரும் ஒரே அறையில் உறங்க, பூங்கொடியின் நெற்றி மீது மகிழன் மெல்லிய முத்தமிட்டது வரை மட்டுமே பூங்கொடிக்கு நினைவிருந்தது. அடுத்த நாள் காலை அவள் கண் விழித்த போது, ஒரு பெரிய தலையணையை காலுக்கு இடையில் கொடுத்து, அதை கட்டி பிடித்த வண்ணம், பெரிய கட்டிலின் மறுபுறம் மகிழன் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கிக் கொண்டிருந்த கோணம் கண்டு பூங்கொடிக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. அதன் பிறகே நேற்றைய நினைவுகளின் தாக்கம் சரம் தொடுக்க, தன் கதையை கேட்ட மக...

mazhai -11

Image
மழை – 11 கொஞ்சமும் இருமாமல், செருமாமல் அந்த உருளியில் இருந்த மொத்த மதுவையும் தன் வயிற்றிற்கு தாரை வார்த்து இருந்தாள் பூங்கொடி. புறங்கையால் தன் வாயை துடைத்தவள், பெரிய ஏப்பம் ஒன்றை வெளியேற்றிவிட்டு, தனக்கு அருகிலிருத்த மகிழனின் தலைமுடியை சற்றே எக்கி வாசம் பிடித்தாள். மகிழன் அதிர்ச்சியின் பிடியிலிருந்து விடுபடாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. பூங்கொடியில் உடலில் கலந்த ஆல்கஹால் மெல்ல மெல்ல தன் வேலையை காட்டத் துவங்கியிருந்தது. அவனைப் பார்த்து சப்பணங்காலிட்டு அமர்ந்தவள், இரு கரத்தினையும் வேகமாய் தட்டியபடி, “செம்ம செம்ம... செம்ம கதை மிஸ்டர் யானி... யாராச்சும் டைரக்டர்கிட்ட கொடுத்தா மாஸ் படம் எடுப்பான். யப்பா என்ன பீல்... என்ன ட்விஸ்ட்....’’ என்றவள் இரு விரல்களை வாயில் நுழைத்து விசிலடித்தாள். அர்த்தராத்திரியில் அந்த உற்சாக ஒலி, உறங்கிக் கொண்டு இருப்பவர்களின் உறக்கத்தை பறித்து விடும் என்று உணர்ந்த மகிழன் வேகமாய் அவள் அருகில் வந்து தன் உள்ளங்கையால் ஓசை எழுப்பும் அவள் செப்பு வாயை சிறை செய்தான். “ஷ்.... பூங்கொடி....