மழை – 12 இன்னும் அரை மணி நேரத்தில் நீச்சல் வகுப்பிற்கு கிளம்ப வேண்டும். ஆனால் ஏனோ பூங்கொடிக்கு அந்த வகுப்பிற்கு கிளம்ப அவ்வளவாய் விருப்பம் இல்லை. போட்டிகளுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்க, இவளின் பயிற்சியாளரோ பூங்கொடியை பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தார். தினமும் காலை இரு மணி நேரமும், மாலை இரு மணி நேரமும் நீச்சல் குளத்திலேயே முங்கி இருக்க வேண்டிய அவசியம் நேரிட்டது அவளிற்கு. மறுபுறம் மகிழனின் அலுவலகத்தில் வருடாந்திர தணிக்கை நடை பெற்றுக் கொண்டிருக்க, அவனை கண்ணில் காண்பதே வெகு அறிதாய் இருந்தது. அன்றைக்கு மதுவின் ஆதிக்கத்தில் இருவரும் ஒரே அறையில் உறங்க, பூங்கொடியின் நெற்றி மீது மகிழன் மெல்லிய முத்தமிட்டது வரை மட்டுமே பூங்கொடிக்கு நினைவிருந்தது. அடுத்த நாள் காலை அவள் கண் விழித்த போது, ஒரு பெரிய தலையணையை காலுக்கு இடையில் கொடுத்து, அதை கட்டி பிடித்த வண்ணம், பெரிய கட்டிலின் மறுபுறம் மகிழன் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கிக் கொண்டிருந்த கோணம் கண்டு பூங்கொடிக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. அதன் பிறகே நேற்றைய நினைவுகளின் தாக்கம் சரம் தொடுக்க, தன் கதையை கேட்ட மக...