Mazhai - 15 (Final ud)
மழை – 15
அடுத்த இரு நாட்களும் மகிழன் தன் அலைபேசியை தீண்டக் கூட முடியாமல் போனது. மாலை வேளைகளில் பதக்கம் வென்றவர்களை யாராவது உயர் அதிகாரிகள் சந்திக்க வந்து கொண்டே இருந்தார்கள்.
அதன் நிமித்தம் ஏதேனும் நிகழ்சிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருந்த வண்ணமே இருந்தது. காலை வேளையிலோ, இந்தியா பங்கு பெறும் மற்ற விளையாட்டு போட்டிகளில் சக வீரர்களை உற்சாகப்படுத்த அவர்களுடன் திடலில் இருக்க வேண்டி வந்தது.
இதற்கிடையில் கிடைக்கும் உணவு இடைவேளைகளில் அவன் பூங்கொடிக்கு அழைத்து பேசவே எண்ணினான். ஆனால் இவன் பதக்கம் வென்ற மறுநாள் விடியற்காலையில், அன்று நடக்க இருந்த நீச்சல் போட்டியில் பங்கு பெறும் வீராங்கனை ஒருத்திக்கு ஆலோசனை வழங்கும் படி, அவரின் பயிற்றுனர் வேண்ட நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தான்.
அப்பெண்ணிற்கு வளர்ச்சி குறைபாடோடு, இரு கால்களும் உள்நோக்கி வளைந்து வித்யாசமாய் இருந்தன. பிறவிக் குறைபாடாய் இருக்கும் என்று ஊகித்தவன், அப்பெண்ணை தன் முன்னே நீந்த சொன்னான்.
அதன் பிறகு, அவளின் நீச்சல் வேகத்தை மேம்படுத்த குறிப்புகள் கொடுக்க, ஜார்கண்டின் ஏதோ ஒரு குக் கிராமத்திலிருந்து வந்திருந்த அப்பெண்ணும், கவனமாய் கேட்டுக் கொண்டாள்.
நீச்சல் குளத்தின் அருகே சென்றவன் குனிய, அவன் மேல் சட்டையிலிருந்த அலைபேசி நழுவி நீரை சரண் புகுந்தது. “ஓ காட்..’’ என்று அவன் குரல் கொடுக்க, நீருக்குள் முங்கியிருந்த ரபியா பாய்ந்து சென்று நீருக்குள் இருந்த அலைபேசியை மீட்டு வந்தாள் தான்.
ஆயினும் அது தன் செயல் திறனை இழந்தது. அங்கிருந்த நெருக்கடியில் உடனே அலைபேசியை மாற்ற அவனுக்கு நேரம் இல்லை. அன்றைக்கு நடந்த நூறு மீட்டர் நீச்சல் போட்டிகளில் ரபியா வெள்ளிப் பதக்கம் வெல்ல, அவளின் பயிற்றுனர் இறுதி நிமிடங்களில் யானியின் வழிகாட்டுதலும் ரபியா பதக்கம் வெல்ல முக்கிய காரணம் என கூறிட, எப்பொழுதும் அவனை சுற்றி ஒரு கூட்டமிருந்த படியே இருந்தது.
அவனுக்கு அவன் அம்மாவின் தொலைபேசி எண் மனனம் என்பதால் அவருக்கு தன் பயிற்றுனரின் அலைபேசி மூலம் அழைத்து, தன் அலைபேசி செயல்படாது என்பதை தெரிவித்து, தான் இந்தியா வர மூன்று நாட்களாகும் என்பதை தெரிவித்தவன், அன்னையிடமிருந்து மருதுவின் அலைபேசி எண்ணை வாங்கினான்.
இரவில் கிடைத்த சொற்ப இடைவெளியில் மருதுவிற்கு அழைத்து, தன் அலைபேசி பற்றி உரைத்து, அவனிடமும் தான் இந்தியா வரும் நாளை குறிப்பிட்டவன், பூங்கொடியை பற்றிக் கேட்க, அவள் அப்போது தான் யானியின் எண்ண அலைகளிலிருந்து மீள நதிக்கரை சென்றிருந்தாள்.
மருதுவின் பதிலால் ஏமாற்றம் அடைந்த மகிழன், “ஓ.. சரி.. இது என் கோச் நம்பர். சேவ் பண்ணிக்கோங்க. நான் இந்தியா வந்ததும் கொடிக்கு கூப்பிடுறேன்னு சொல்லுங்க. எனக்கு ஏதாவது முக்கியமான தகவல் சொல்லணும்னா இந்த நம்பருக்கு கூப்பிடுங்க. அவருக்கு இந்தி, இங்கிலீஷ் தான் தெரியும். முக்கியமா இருந்தா மட்டும் கூப்பிடுங்க. இல்லைனா நான் இந்தியா வந்ததும் நானே கூப்பிடுறேன். எல்லாரையும் கேட்டன்னு சொல்லுங்க மச்சான். பை.’’ என்று மகிழன் அழைப்பை துண்டிக்க, மருதுவிற்கு தலை கால் புரியவில்லை.
முதன் முறையாக மகிழன் மருதுவை மச்சான் என்கிறான். ஏற்கனவே பூங்கொடியின் கணவன் என்று மருதுவிற்கு மகிழன் மேல் பிரியம் உண்டு. ஆனாலும் அவன் ஒட்டா தன்மைக் கண்டு மனதிற்குள் சிறு சுணக்கம் எப்போதும் உண்டு.
அவன் உலக அரங்கில் சாதிக்க அவன் மேல் மரியாதை வந்திருந்தது. அவனோ ‘மச்சான்’ என்று உறவிட்டு அழைக்க, மருதுவின் மனதில் பாசம் உடைப்பெடுத்த நீரூற்றாய் பொங்கி பிரவகிக்க தொடங்கியிருந்தது.
ஊரின் சார்பில் மரியாதை செய்யும் விழாவை கண்ணும் கருத்துமாய் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தவன், மேலும் காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு விழா ஏற்பாடுகளை கவனிக்க சென்றுவிட்டான்.
அந்த இடைவெளியில் மகிழன் சொன்ன அலைபேசி செய்தியை பூங்கொடியிடம் உரைக்க மறந்துவிட்டான்.
பூங்கொடி எங்கு சுற்றி வந்து நின்றாலும், நிமிடத்திற்கு ஒரு முறை மகிழனிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதா என்று அலைபேசியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
முழுதாய் 24 மணி நேரம் கடந்தும் அவனிடமிருந்து எவ்வித செய்தியும் இல்லாது போக, கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளுக்குள் வாட துவங்கினாள் .
“என்ன தான் பிசியா இருந்தாலும்... ஒரு மெசேஜ் அனுப்ப கூடவா நேரம் இருக்காது.’’ என மனசாட்சி அவளிடம் மல்லுக்கு நிற்க, இன்னொரு மனமோ, “முன்ன மாதிரியா இப்ப அவன் யானியாக்கும்..’’ என்று கொக்கலிக் கொட்டியது.
ஒருபுறம் வீட்டில் கூடும் உறவினர் கூட்டம், திருவிழா கண்டது போல, பாராட்டு விழாவிற்கு தயாராகும் ஊர், “யானி வைப் நீங்க தானே..’’ என்ற விசாரிப்போடு வாசலில் குவியும் செய்தியாளர் கூட்டம், இவற்றிக்கு மத்தியில் என்ன ஏதென்று புரியாத பயம் பூங்கொடியின் உள் மனதை அரிக்க துவங்கியிருந்தது.
‘யானிக்கு ஏத்தவளா நான் இருக்க மாட்டேனோ..? அதான் என்ன தவிர்க்க ஆரம்பிசிட்டாரோ..?’’ ஏதோதோ எண்ணங்கள் தம் போல உள்ளுக்குள் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தாலும், வந்தவர்கள் மத்தியில் உற்சாகமாய் இருப்பதை போலத் தான் காட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் வீட்டு ஆட்களுக்கும் அவள் முகம் பார்க்க நேரமின்றி ஆளுக்கு ஒரு வேலையென ஓடிக் கொண்டிருந்தனர். இத்தனை களேபரத்திலும் நிம்மதியாய் அவர்கள் வீட்டில் உண்டு உறங்கிய ஒரே ஆள் மூன்று மாத புது வரவு செந்தமிழன் மட்டும் தான்.
எப்போது வருவான் என பூங்கொடி பசலையில் கைவளை கழன்று வரும் அளவு மெலிய, அந்தப்பக்கம் யானியின் வரவு திட்டமிட்டபடி நிகழாமல் மேலும் மூன்று நாட்கள் தள்ளிப் போனது.
இரண்டு தங்கப்பதக்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கத்தோடு இந்திய வீரர்கள் தாயகம் திருப்ப, நாட்டின் பிரதம மந்திரியே அவர்களை நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அன்றைக்கு டெல்லியில் இரவில் நடந்த நட்சத்திர விருந்தில், கையில் மதுக் கோப்பையுடன் ப்ரணிதா ஒருபுறமும், மாயா ஒரு புறமும் நிற்க, மத்தியில் மகிழன் நின்றுக் கொண்டிருந்த காட்சி, அடுத்த நாள் காலையே செய்தி தாள்களில் வலம் வந்தது.
பாலிவுட் நட்சத்திர கதாநாயகி என்ற வகையில் மாயாவும், நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை என்ற வகையில் ப்ராணிதாவும் அந்த நிகழ்விற்கு வந்திருந்தனர்.
இயல்பாய் அவர்கள் மகிழனை பாராட்டிக் கொண்டிருந்த போது, ஊடகவியலாளர் எடுத்து புகைப்படமது. அவர், “மோஸ்ட் சார்மிங் பர்சன்.. வித் சார்மிங் பியூடீஸ்..’’ என்று தன் முக நூல் பக்கத்தில் பதிய, அந்த புகைப்படம் நொடியில் வைரலாகி, செய்தித்தாள் வரை வந்துவிட்டிருந்தது.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்த பூங்கொடிக்கு, இந்த புகைப்படம் வேறு வயிற்றில் அமிலக் கரைசலை ஊற்றி வைத்தது. “எனக்கு ஒரு மெசேஜ் பண்ண டைம் இல்ல... அங்க ரெண்டு பேருக்கு நடுவுல நின்னு கடலை வறுத்துட்டு இருக்காறா.. வரட்டும் பேசிக்கிறேன்..’’ என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுக்க துவங்கினாள்.
பாவம் அவளும் தான் என்ன செய்வான். பல முறை மகிழனின் அலைபேசிக்கு அழைத்துப் பார்த்தாள். அது அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் சொல்லி அவளை கடுப்பிற்குள் ஆழ்த்தியது.
அடுத்த இரண்டாம் நாள் சென்னை வந்தவனுக்கு அங்கு மாநில அளவிலான பாராட்டு விழா ஏற்பாடு செய்யபட்டிருக்க, அனைத்தையும் முடித்துக் கொண்டு அவன் தன் கொடியை தேடி கிளம்ப இரவாகிவிட்டிருந்தது.
அப்பொழுது தான் அவன் தன்னுடைய புது அலைபேசியை உயிர்ப்பித்து இருந்தான். பழைய தகவல்கள் அந்த அலைபேசியோடு விடை பெற்று இருக்க, முதல் காரியமாய் கொடிக்கு, “மாமா வந்துட்டே இருக்கேன் பொண்டாட்டி..!’’ என்று ஒரு தகவலை அனுப்ப முடிவு செய்தான்.
ஆனாலும் அவளிடம் சொல்லாமல் போய் நின்று அவளுக்கு ஆனந்த அதிர்சியை அளிக்க விரும்பினான்.
நள்ளிரவில் வாயில் மணி ஒலிக்க, முதலில் எழுந்தது கூடத்தில் படுத்திருந்த மருதுபாண்டி தான். வீட்டில் வேலை அதிகம் என்பதால் காஞ்சனையின் தாய் வந்திருந்தார் குழந்தையை பார்த்துக் கொள்ள.
மகளும் தாயும் தங்கள் அறையில் துயிலட்டும் என மருது கூடத்திற்கு வந்திருந்தான். ஆக முதலில் எழுந்தவன் அவனே.
‘இந்த நேரத்துல யாராயிருக்கும்’ என்ற சிந்தையோடே வெளிக் கதவின் சாவி தேடியெடுத்தவன் முற்றத்து விளக்குகளை ஒளிரவிட்டு வாயில் கதவை திறக்க, வெளி இரும்பு கதவிற்கு பின்னால் ஜெர்கின் உடையில் நின்றுக் கொண்டிருந்தவனை அவனுக்கு சரியாய் அடையாளம் தெரியவில்லை.
வாயிலை தாண்டி நடந்தபடியே, “யாருப்பா அது..?’’ என்று குரல் கொடுக்க, மச்சான் ஊரைக் கூட்டிக் காரியத்தை கெடுத்துவிடுவானோ என்று பயந்த மகிழன், “மச்சான் நான் தான். கொஞ்சம் கத்தாம வாங்க.’’ என்று மென் குரலில் இயம்ப, அடுத்த நொடி மருது வாயிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
“என்ன மாப்பிள்ளை நீங்க. இப்படியா சொல்லாம கொள்ளாம வருவீங்க. ஊரே உங்களை எதிர்பார்த்து தான் காத்திருக்கோம். நாளைக்கு மேள, தாளம் ஆட்டம் பாட்டம் எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க ஊருக்காரங்க. நீங்க சத்தமே போடாமா நடு ராத்திரி வீட்டு வாசல்ல வந்து நிக்குறீங்க.’’ என்று வேக வேகமாய் பேசிக் கொண்டே கதவை திறந்தான்.
“ஷப்பா... குடும்பத்துக்கே வாய் அதிகம் போல.’’ என்று மனதிற்குள் சலித்தவன், உள்ளே நுழைய, “இருங்க வீட்ல இருக்க எல்லாரையும் எழுப்புறேன். எல்லாரும் உங்களுக்காக தான் காத்துட்டு கிடக்காக.’’ என்றவன் உள்ளே நுழையும் முன்னே மகிழன் அவனை கட்டிப் பிடித்து தன் கைவளைவில் சிறை வைத்தான்.
மெதுவாய் அவன் காதின் ஓரம் குனிந்தவன், “மச்சான்... வெட்கத்தை விட்டு உங்ககிட்ட சொல்றேன். நான் என் பொண்டாட்டியை கண்ல பார்த்தே சரியா நாலு மாசம் பதிமூணு நாள் ஆச்சு. ரொம்ப ஏங்கிப் போய் வந்து இருக்கேன். தயவு செஞ்சி யாரையும் எழுப்பாம என்னை கொடி ரூம்கிட்ட கொண்டு போய் விடுங்க. அப்பதான் உங்களுக்குன்னு பாரின்ல இருந்து வாங்கிட்டு வந்த அயிட்டம் எல்லாம் காலையில ஒழுங்கா உங்க கையில கொடுப்பேன். சரியா. இப்ப வழ வழன்னு பேசாமா.. நேரா கொடி ரூம்கிட்ட போறோம்.. டீல் ஓகேயா..!’’ என்றுவிட்டு நடக்க, மருதுவிற்கு தான் கூச்சத்தில் உடல் நெளிந்து கொண்டிருந்தது.
இப்படி குறும்பு செய்யும் மகிழனை இப்பொழுது தான் பார்க்கிறான். பிறகு கொடியோடு சேர்ந்த நார் அல்லவா அவன்..! அதோடு அவன் அணைத்து பிடித்திருந்த விதமும், காதோடு இதழ் உரச பேசிய பேச்சும் பாவம் மருது ஏதோ புது மணப்பெண் போல திகைத்து திண்டாடித் தான் போய்விட்டான்.
என்ன தான் மருது இரண்டு ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து பிறந்திருந்தாலும் இதுவரை அவன் தோளில் யாரும் கை போட்டு பேசியதில்லை. அவன் சுபாவம் அப்படி. யாரையும் தன் வட்டத்திற்குள் எளிதில் அனுமதிக்கமாட்டான்.
பள்ளிப்படிப்பும் பாதியில் தடைபட அவனுக்கு அந்த வகையிலும் நண்பர்கள் என்று யாரும் இல்லை. தங்கமும், செந்தூரமும் இவனுக்கு மரியாதை கொடுத்து ஒதுங்கியே நிற்பர். அதிகம் ஒட்டுவது பூங்கொடி தான்.
அதுவும் உடம்பு சரியில்லாத நாட்களில் அவன் மடியில் தலை வைத்துப் படுப்பாள். சிறு வயது பழக்கம். மற்றபடி மனைவி என்ற ஒருத்தி வந்த பிறகே அதுவும் மூடிய அறைக்குள் மட்டுமே அவனின் நெருக்கம் இருக்கும்.
பொது வெளியில் எப்போதும் பத்து அடி இடைவெளி இருக்கும். ஒருவனின் வெளி உடைத்து அவன் அகம் நுழைகிறோம் என்ற எவ்வித எண்ணமுமின்றி மகிழன் முன்னால் நடந்து கொண்டிருக்க, “மாப்பிள்ளை...’’ என்று ரகசிய குரலில் அழைத்துக் கொண்டே மருது பின்னால் ஓடினான்.
“தங்கப்பிள்ள ரூம் இந்தப் பக்கம்..’’ என்று முன்னடத்தி சென்றவன், கதவு சற்றே உள்நோக்கி திறந்திருக்க, மகிழனுக்கு மிகவும் வசதியாய் போயிற்று.
அவன் மருதுவின் முகம் பார்க்க, “எங்க வீட்ல அறைக் கதவை அடைக்குற பழக்கம் கிடையாது. தனியா தூங்கும் போது..’’ என்று சேர்த்து சொல்ல, “தாங்க்ஸ் மச்சான்..’’ என்றவன், என்றவன் சற்றே எம்பி மருதுவின் கன்னத்தை எச்சில் செய்து விட்டு, அறைக்குள் நுழைந்து கதவடைக்க... ‘இதென்னடா எனக்கு வந்த சோதனை’ என்று மருது திகைத்து நின்றான்.
பிறகு தன் மண்டையில் தானே தட்டிக் கொண்டவன், ‘பாவம் மாப்பிள்ளை ரொம்பவே ஏங்கிப் போய் தான் வந்திருப்பார் போல. தங்கச்சிக்கு தர வேண்டியதை எல்லாம் எனக்கு கொடுத்துட்டு இருக்கார் ..’’ என்று எண்ணிக் கொண்டவனுக்கு ஏனோ உடனே காஞ்சனையை அணைத்துக் கொண்டு உறங்க வேண்டும் போல இருந்தது.
அறையில் அத்தை இருக்கிறார்கள் என்ற நிதர்சனம் உரைக்க, “உனக்கு இன்னைக்கு திண்ணை தாண்டா..’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் மீண்டும் கூடத்தில் வந்து படுத்துக் கொண்டான்.
வெகு நேரம் இரவு விழித்திருந்த பூங்கொடி அப்பொழுது தான் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். வெளிக் கதவின் அருகே ஏதோ அரவம் கேட்பது போல தோன்ற கனவென்று அதை ஒதுக்கி புரண்டு படுத்தாள்.
விடி விளக்கின் ஒளியில் பூங்கொடியின் உருவம் மகிழனுக்கு மிக நன்றாகவே தெரிய, அவள் அருகே சென்று சற்றே குனிந்தவன், நன்றாய் வலிக்கும் வண்ணம் அவள் கன்னத்தை கடித்தான்.
“ஆ...’’ என்படி வலியில் விழித்த பூங்கொடி, தனக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும், ஒரு நொடி நெகிழ்ந்து, பின் அவன் மேல் தனக்கிருந்த கோபம் நினைவிற்கு வர அவள் முறைக்க துவங்க, எதையும் கருத்தில் கொள்ளும் நிலையில் மகிழன் இல்லை.
“கொடி..’’ என்ற கொஞ்சல் மொழியோடு அவள் மேல் சரிந்தவன் தான். அவள் இதழ்களை விட்டால் தானே அவள் பேச, “அவள் இதழ்கள் விடுவிக்கப்பட்ட போது.. சூடான அவன் இதழ்கள் அவள் செவியின் அருகே சரசம் செய்தபடி, “உன் மாமா ஜெயிச்சிட்டேன் பூங்கொடி. யானியா ஜெயிச்சிட்டேன். சொல்லுடி.. மாமா ஜெயிச்சிட்டேன்னு சொல்லு..’’ என்று அவளை உந்த.. அவன் கரங்களில் சிக்கி நெகிழ்ந்துக் கொண்டிருந்த அவளோ... “ம்ம் ... ஜெயி.....ச்சி....டீங்க மா .. மா..’’ என்று குழறியடித்து அவன் தாகத்தை இன்னும் கூட்டினாள்.
அர்த்தம் புரியா உளறல்களும், குழறல்களும் அறையை நிறைத்திருக்க, முதல் கூடல் முடிந்த பின் பூங்கொடி மகிழனின் வேற்று மார்பில் சரிந்திருந்தாள்.
இதுவரை உள்ளதை அரித்து எடுத்த அத்தனை பயங்களும் சென்ற தடம் தெரியாமல் இருக்க, நன்றாக அவனை நெருங்கிப் படுத்தவள் வந்தவுடன் அவன் செய்தது போல வலுக் கொண்டு அவன் கன்னம் கடித்தாள்.
பூங்கொடியை போல அல்லாது, மகிழன், “ஆ...’’ என்று வேகமாய் கத்த, தன் கரம் கொண்டு அவன் வாய் மூடியவள், ‘எதுக்கு இப்படி உயிர் போற மாதிரி கத்துறீங்க. வீட்ல எல்லாரும் இருக்காங்க. அப்புறம் காலையில என்னை ஓட்டி எடுப்பாங்க.’’ என்று கவலை கொள்ள, ‘ஐ..இது நல்லா இருக்கே...’ என்று மனதிற்குள் எண்ணியவன், “சரி நான் கத்த மாட்டேன். ஆனா நீ நான் சொல்றது எல்லாம் கேக்கணும்.சரியா.’’ என்று மனைவியுடன் ஒரு புது ஒப்பந்தம் போட்டான்.
‘இது தான் சொந்தக் காசுல சூனியம் வச்சிகிறது போல..’ என்று மனதிற்குள் நொந்தவள், தலையை வெறுமனே ஆட்டி வைத்தாள்.
“மாமா.. உனக்கு சாணின்னு நான் சரியா பேர் வச்சி இருக்கேன். மாடு மாதிரி கனக்குற..’’ என்ற பூங்கொடி குற்றப் பத்திரிக்கை வாசிக்க அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை அவன்.
“தொட்டா உடஞ்சி போற குச்சி மாதிரி இருந்தா அப்படிதான். இனி நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து என் ஐஸ் குச்சி.’’ என்றவன் மீண்டும் அவளை ஆக்ரமிக்க, கொடி உல்லாசமாய் அவனுள் தொலைய துவங்கினாள்.
அடுத்த நாள் காலை வீட்டில் அனைவருமே வழக்கம் போல பூங்கொடியை வைத்து செய்தனர். வழமையாய் தந்தையின் அருகே ஓடி செல்பவள், அன்று மகிழனின் பின் சென்று மறைய, அவளை விட்டு நகர்ந்து சென்றவன், காஞ்சனையின் அருகில் நின்று,
“உங்க வீட்டு பொண்ணுக்கு நீங்க கறி வாங்கி தர மாட்டீங்களா. நேத்து கன்னா பின்னான்னு என் கன்னத்தை கடிச்சி வச்சிட்டா.’’ என்று சிறுவன் போல குற்றப் பத்திரிக்கை வாசிக்க, காஞ்சனை, “ஐயோ..’’ என்று வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டு மருதுவின் பின் சென்று ஒளிந்துக் கொண்டாள்.
அதுவரை அவளை கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வேலை இருப்பதை போல ஓடி ஒளிய, மகிழன் ‘எப்படி..’ என கண்களால் பூங்கொடியிடம் கேள்வி கேட்க, அவளோ, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..’’ என்று உதட்டை சுளித்து விட்டு நகர்ந்தாள்.
சுளித்த அவள் உதட்டையே பார்த்துக் கொண்டிருந்தவன், “சுளிக்கவா செய்யுற நைட்டு கடிக்கிறேன் இரு..’’ என்று ஜாடை காட்ட, பத்திரம் காட்டி விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.
சரியாய் காலை ஒன்பது மணிக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் மேள தாளத்தோடு பூங்கொடியின் வீடு தேடி வந்தனர்.
அனைவரும் அவனை அழைத்துக் கொண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம் நோக்கி செல்ல, வழிநெடுக பதினெட்டுபட்டி ஊர்க்காரர்களும் விழாவினை வேடிக்கை பார்க்க குவிந்திருந்தனர்.
முதலில் மேல் பக்கம் திறப்பு கொண்ட காரில் நின்றபடி கை அசைத்து வந்த மகிழன், மண்டபம் நெருங்கவும், இறங்கி நடக்க முனைந்தான். ஆனால் அதற்குள் எங்கிருந்தோ தங்க பாண்டியும், செந்தூரனும் ஓடி வந்து அவனை தங்களுடைய தோளில் தாங்கிக் கொண்டு ஊர்வலமாய் சென்றனர்.
அப்பழுக்கில்லாத அம்மக்களின் அன்பு அவன் நெஞ்சை மிகவும் நெகிழ்த்தியது. இந்த நான்கு நாட்களில் எத்தனையோ பாராட்டு விழாக்களை கண்டுவிட்டான். ஆனால் அவன் நெஞ்சை தொட்டது இவ்விழா தான்.
எக்ஸ் எம்.எல்.ஏ ஒருவர் விழாவினை துவங்கி வைக்க, பஞ்சாயத்து தலைவர் வாழ்த்துரை வழங்கி பேசினார். ஊரின் சார்பில் அவனுக்கு புதிதாய் ஒரு தங்க மெடல் செய்யப்பட்டிருக்க, அதை ஊரின் முக்கிய பிரமுகர்கள் இணைந்து அவனுக்கு அணிவித்தனர்.
அவன் பேச வேண்டிய நேரம் வர, கூடத்தில் ஒருத்தியாய் நின்றுக் கொண்டிருந்த பூங்கொடியை மேடைக்கு அழைத்தான். தன் கழுத்தில் இருந்த தங்க மெடலை அவள் கழுத்தில் அணிவித்தவன், “என்னோட இந்த வெற்றிக்கு காரணம்.... உங்க ஊர்ப் பொண்ணு தான். இவ இல்லைனா யானி மறுபடி பிறந்து இருக்கவே மாட்டான். ரொம்ப சாதாரண மகிழனாவே செத்துப் போயிருப்பான். உங்க அன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல. எனக்கு உங்களை எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.’’ அவன் அப்படி சொன்னதும் கூட்டத்தில் பயங்கர கரவொலி எழுந்தது.
இளசுகள் விசிலடிக்க, பெரியவர்கள் எழுந்து நின்று ஆசிர்வதித்தனர். அக்காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடியின் குடும்பத்தினர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பாராட்டு விழா முடியவும் மண்டபத்திலும், ஊரை அடைத்து பொது வெளியில் போட்டிருந்த பந்தலிலும் பந்தி தொடங்கியது.
தன் மூன்று மச்சான்களோடு, பூங்கொடியின் அண்ணிகளும் பம்பரமாய் சுழல்வதைக் கண்ட மகிழனின் மனம் உறவின் உன்னதத்தை உணர்ந்தது.
மாலை வரை விருந்து வேலைகள் இருக்க, உறவுக் கூட்டத்தை எல்லாம் வழி அனுப்பிவிட்டு, பூங்கொடியின் வீட்டு ஆட்கள் மட்டும் கூடத்தில் கூடி இருந்தனர்.
பூங்கொடியின் தந்தை ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்ற மூன்று மகன்களும் நின்றுக் கொண்டிருந்தனர். வைசாலியும, காஞ்சனையும் கீழே அமர்ந்திருக்க, மகிழன் தான் வெளி ஊரிலிருந்து அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கடை பரப்பினான்.
வீட்டிலிருந்த அப்பத்தா முதல், புது வரவு செந்தமிழன் வரை ஒருவரையும் விடாது நினைவில் வைத்திருந்து அவர்கள் உபயோகிக்கும் வண்ணம் பரிசுப் பொருட்கள் தந்தான்.
அனைவருக்கும கொடுத்து முடித்த பின், பூங்கொடி தரையில் காலை உதைத்து சிணுங்கிக் கொண்டே, ‘எனக்கு ஒன்னும் இல்லையா..’’ என்று வினவ, “உனக்கு தான் மாமா நான் முழுசா இருக்கேனா.. ஓடி வா.. வந்து எடுத்துக்கோடி ஐஸ் குச்சி..’’ என வார.. வழமையாய் அவளுக்காய் குரல் கொடுக்கும் அவள் தந்தையும் அனைவரோடும் இணைந்து சிரித்தார்.
அன்றைக்கு இரவில் பண்ணை வீட்டில் மச்சான்களோடு தண்ணி கச்சேரி களை கட்டியது. இதற்கு முன் சகோதரர்கள் மூவரும் ஒன்றாய் அமர்ந்து குடித்தது எல்லாம் இல்லை. எல்லாம் மற்றவர் அறியாமல் அளவோடு தனி தனியே குடிப்பார்கள் அவ்வளவே.
அதிலும் செந்தூரனுக்கு மருது என்றால் பயம் அதிகம். மகிழன் தான் “வாங்க மச்சான்ஸ்.. இன்னைக்கு பாரின் சரக்கோட செலிபிரேட் பண்ணுவோம்.’’ என்று மூவரையும் ஒரே இடத்தில் கூட்டியிருந்தான்.
மகிழனிடம் மறுத்து பேச முடியாத மூவரும் வேறு வழியின்றி ஒன்று கூடியிருந்தனர். இவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் இரண்டு ரவுன்ட் முடியும் வரை மட்டும் தான்.
இரண்டு ரவுன்ட் முடிந்ததும், முதலில் மருது எழுந்து நின்று, “மாப்பிள்ளை.. ஐ.. லவ் யூ..’’ என்று பிரகாஷ்ராஜ் பாணியில் சொல்ல, “சரியா சொன்னணே..” என்று பின்பாட்டு பாடிக் கொண்டு மற்ற இருவரும் எழுந்து நின்றனர்.
அதன் பிறகு மகிழன் மட்டும் நிற்பான என்ன..? தானும் எழுந்து நின்றவன், “டேய்.. கடைசி மச்சான் உனக்கு என் பூங்கொடி கண்ணு..” என்று அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட, அவனும், “ஐ டூ லவ் யூ மச்சான்..’’ என்று மகிழனை கொஞ்சினான்.
“மாப்பிள்ளை அவன் கண்ணு மட்டும் தான் தங்கச்சி மாதிரி. பய புள்ளைக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல. நீங்க இப்படி வந்து உக்காருங்க.’’ என்று மகிழனை வாரியபடி, பொறுப்பாய் தங்க பாண்டி அவனை அருகிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.
“நீ கொஞ்சம் கூட பூங்கொடி மாதிரியே இல்ல. ஆனாலும் ஐ லவ் யூ மச்சான்..’’ என்று தங்க பாண்டி கன்னத்திலும் மகிழன் முத்தம் வைக்க, அடுத்து தான் தான் என்பதை உணர்ந்த மருது, இரு கரத்தாலும் கன்னங்களை மூடிக் கொண்டவன்,
“டேய் மாப்பிள்ளை.. ஆளை விடுறா சாமி. என் பொண்டாட்டி பிள்ளை பெத்தே மூணு மாசம் தான் ஆகுது. டாக்டர் முழுசா அஞ்சி மாசம் கிட்ட போகவே கூடாதுன்னு சொல்லி இருக்காக. அத்தை வேற ஊர்ல இருந்து வந்து இருக்கு. என்னை கிளப்பிவிட்டு என் தூக்கத்தை கெடுத்துடாத சாமி..’’ என்று கெஞ்ச, மற்ற தனையன்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
மருது இப்படி அவர்கள் முன் இலகுவாய் பேசுவது இது தான் முதல் முறை. கொஞ்ச நேரம் அவர்களோடு மகிழ்வாய் வாயடித்தவன், நேரம் பத்தை காட்டவும், “சரி மச்சான்ஸ்.. மிச்சம் மீதி இருக்க சரக்கையெல்லாம் நீங்க வயித்துல சரிச்சிட்டு இங்கயே தூங்கினாலும் சரி.. இல்ல வீட்டுக்கு வந்தாலும் சரி..நான் கிளம்புறேன். என் ஐஸ் குச்சி வையிடிங்’’ என்று எழுந்து கொண்டான்.
அவன் கிளம்புகிறேன் என்றதும், செந்தூரன் எழுந்து கொண்டான். அவன் தான் தான் வண்டி ஓட்ட நேரும் என்பதால் அளவோடு குடித்திருந்தான். தம்பியை பார்த்த மருது, “பார்த்துப் போடா சின்னவனே... பத்திரம்..’’ என்றதோடு கார் வரை வந்து இருவரையும் வழி அனுப்பி வைத்தான்.
வாழ்வில் முதல் முறையாக அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாய் குடித்துவிட்டு, ஒரே போர்வையில் உறங்க துவங்கினர்.
வீட்டை அடைந்ததும், செந்தூரன் சிறிய குரலில், “மாப்பிள்ளை.. வீட்ல எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க.. மெதுவா உள்ள போகணும். அதுவும் அப்பா ரூம்ல முழிச்சிட்டு இருந்தார்னா செத்தோம். அப்புறம் முக்கியமா ஹால்ல தூங்குற கிழவி கண்ணுல படவே கூடாது. சரியா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திரும். சத்தம் போடமா கொடி ரூமுக்கு போயிடுங்க. நான் என்னோட ரூமுக்கு போறேன்.’’ என்றவன் கூடத்திற்கு பக்கவாட்டில் இருந்த தென்னை மரத்தில் ஏறி, அங்கிருந்த திட்டின் வழியே ஜன்னலை திறந்து அரை நொடிக்குள், தன் அறைக்குள் மாயமானான்.
‘அடப்பாவி மச்சான்.. என்ன தனியா கோர்த்துவிட்டுட்டு ஒடிட்டானே..’ என்று மனதிற்குள் செந்தூரனை அர்ச்சித்தவன், பூனை நடை வைத்து மெதுவாய் வீட்டிற்குள் நுழைய, “வந்துடீங்களா மாப்பிள்ளை’’ என்ற பூங்கொடியின் தந்தை குரல் அவனை அப்படியே தேக்கியது.
வாயில் சர்க்கரை அள்ளிப் போட்டு அம்மாவிடம் மாட்டிய சிறுவன் போல மகிழன், “மாமா..’’ என்று மெதுவாக அழைக்க, “பண்ணை வீடு போனீங்கன்னு தெரியும். என்ன செய்ய இதெல்லாம் இந்த காலத்துல ஒரு பேசன் மாதிரியாகிப் போச்சு. ஏதோ ஒரு நாள் தப்பில்ல. நீங்க பெரிய விளையாட்டு ஆளு. உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. உடம்பு பத்திரம் மாப்பிள்ளை. ‘’ என்றவர் தன் அறை நோக்கி நடக்க, மகிழனுக்கு அவரின் அக்கறை கூட பிடித்திருந்தது.
தனிமை வாய்க்கும் போது பூங்கொடி அவனோடு சண்டையிடவே எண்ணியிருந்தாள். ஆனால் காலையில் நடந்த நிகழ்வுக்க அவள் மனதினை மாற்றியிருந்தது.
நேற்றைக்கு போல ஆவேசம் ஏதுமின்றி.. சிலை வடிக்கும் சிற்பியாய், வீணை வாசிக்கும் கலைஞனாய் அவன் அவள் மென்னுடலை மீட்ட, பூங்கொடி மகிழனுள் மூழ்கினாள்.
முழுதாய் கலைந்தவள், அவள் வேற்று மார்பில் சரிந்தபடி, “எவ்ளோ பணம் மாமா. அவ்வளவும் வச்சி என்ன செய்யப் போறீங்க.’’ என கேட்டாள்.
ஆம் அவனுக்கு தொகையாய் பொருளாய் வந்த பரிசுகள் மட்டும் சில கோடிகளை தாண்டியிருந்தது.
அவள் உச்சந்தலையில் தன் தாடையை பதித்தவன், “ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆரம்பிக்கப் போறேன் கொடி. அக்னி சிறகுகள் ஸ்போர்ட்ஸ் அகாடமி. என்னை மாதிரி எத்தனை பேர்... எத்தனை குழந்தைங்க... அவங்க உடல் ஊனத்தை நினச்சி சமூகம் அப்படிங்கிற வெளிச்சத்தை பார்க்க பயந்து... நாலு சுவர்ங்கிற இருட்டுகுள்ள இருப்பாங்க. அவங்களை எல்லாம் வெளிய கொண்டு வரணும் . அவங்ககிட்ட என்ன திறமை இருக்குன்னு கண்டு பிடிச்சி அவங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டனும். நான் வாங்கி வந்தது ஒரு கோல்ட் மெடல் தான் கொடி. இனி என் கனவு எல்லாம்... ஒவ்வொரு பேரா ஒலிம்பிக்ஸ்லையும், இந்தியாவுக்கு தங்கத்தை மொத்தமா அள்ளனும். இது இப்போதைக்கு என் கனவு தான். நிஜமாகுமா பூங்கொடி.’’ என தன் மறுபதியானவளின் முகம் பார்த்தான்.
அவன் விழித்திரையில் எதிரொலித்த கனவுகளை தன் கரு விழியில் பிரதிபலித்தவள், “கண்டிப்பா மாமா, உங்க கனவு நிறைவேற... நானும் உங்களோட கை கோர்த்து நிற்பேன்.’’ என்றவள் அவன் கரங்களை இறுக்கிக் கொண்டாள்.
“சரி தான்.. அப்ப... இனிமே நமக்கு நிறைய வேலை வந்துடும் பூங்கொடி. சோ.. இப்ப கிடைச்ச டைம்ல நாம கொஞ்சம் லவ் பண்ணிக்கலாம்.’’ என்றவன் மீண்டும் அவளிடம் தன் சரசத்தை துவங்க, வெளியே மழை தன் பூமிக் காதலியிடம் சாரலாகி சரசத்தை துவங்கியிருந்தது.
மழை பொழிந்தது.
அடுத்த இரு நாட்களும் மகிழன் தன் அலைபேசியை தீண்டக் கூட முடியாமல் போனது. மாலை வேளைகளில் பதக்கம் வென்றவர்களை யாராவது உயர் அதிகாரிகள் சந்திக்க வந்து கொண்டே இருந்தார்கள்.
அதன் நிமித்தம் ஏதேனும் நிகழ்சிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருந்த வண்ணமே இருந்தது. காலை வேளையிலோ, இந்தியா பங்கு பெறும் மற்ற விளையாட்டு போட்டிகளில் சக வீரர்களை உற்சாகப்படுத்த அவர்களுடன் திடலில் இருக்க வேண்டி வந்தது.
இதற்கிடையில் கிடைக்கும் உணவு இடைவேளைகளில் அவன் பூங்கொடிக்கு அழைத்து பேசவே எண்ணினான். ஆனால் இவன் பதக்கம் வென்ற மறுநாள் விடியற்காலையில், அன்று நடக்க இருந்த நீச்சல் போட்டியில் பங்கு பெறும் வீராங்கனை ஒருத்திக்கு ஆலோசனை வழங்கும் படி, அவரின் பயிற்றுனர் வேண்ட நீச்சல் குளத்திற்கு சென்றிருந்தான்.
அப்பெண்ணிற்கு வளர்ச்சி குறைபாடோடு, இரு கால்களும் உள்நோக்கி வளைந்து வித்யாசமாய் இருந்தன. பிறவிக் குறைபாடாய் இருக்கும் என்று ஊகித்தவன், அப்பெண்ணை தன் முன்னே நீந்த சொன்னான்.
அதன் பிறகு, அவளின் நீச்சல் வேகத்தை மேம்படுத்த குறிப்புகள் கொடுக்க, ஜார்கண்டின் ஏதோ ஒரு குக் கிராமத்திலிருந்து வந்திருந்த அப்பெண்ணும், கவனமாய் கேட்டுக் கொண்டாள்.
நீச்சல் குளத்தின் அருகே சென்றவன் குனிய, அவன் மேல் சட்டையிலிருந்த அலைபேசி நழுவி நீரை சரண் புகுந்தது. “ஓ காட்..’’ என்று அவன் குரல் கொடுக்க, நீருக்குள் முங்கியிருந்த ரபியா பாய்ந்து சென்று நீருக்குள் இருந்த அலைபேசியை மீட்டு வந்தாள் தான்.
ஆயினும் அது தன் செயல் திறனை இழந்தது. அங்கிருந்த நெருக்கடியில் உடனே அலைபேசியை மாற்ற அவனுக்கு நேரம் இல்லை. அன்றைக்கு நடந்த நூறு மீட்டர் நீச்சல் போட்டிகளில் ரபியா வெள்ளிப் பதக்கம் வெல்ல, அவளின் பயிற்றுனர் இறுதி நிமிடங்களில் யானியின் வழிகாட்டுதலும் ரபியா பதக்கம் வெல்ல முக்கிய காரணம் என கூறிட, எப்பொழுதும் அவனை சுற்றி ஒரு கூட்டமிருந்த படியே இருந்தது.
அவனுக்கு அவன் அம்மாவின் தொலைபேசி எண் மனனம் என்பதால் அவருக்கு தன் பயிற்றுனரின் அலைபேசி மூலம் அழைத்து, தன் அலைபேசி செயல்படாது என்பதை தெரிவித்து, தான் இந்தியா வர மூன்று நாட்களாகும் என்பதை தெரிவித்தவன், அன்னையிடமிருந்து மருதுவின் அலைபேசி எண்ணை வாங்கினான்.
இரவில் கிடைத்த சொற்ப இடைவெளியில் மருதுவிற்கு அழைத்து, தன் அலைபேசி பற்றி உரைத்து, அவனிடமும் தான் இந்தியா வரும் நாளை குறிப்பிட்டவன், பூங்கொடியை பற்றிக் கேட்க, அவள் அப்போது தான் யானியின் எண்ண அலைகளிலிருந்து மீள நதிக்கரை சென்றிருந்தாள்.
மருதுவின் பதிலால் ஏமாற்றம் அடைந்த மகிழன், “ஓ.. சரி.. இது என் கோச் நம்பர். சேவ் பண்ணிக்கோங்க. நான் இந்தியா வந்ததும் கொடிக்கு கூப்பிடுறேன்னு சொல்லுங்க. எனக்கு ஏதாவது முக்கியமான தகவல் சொல்லணும்னா இந்த நம்பருக்கு கூப்பிடுங்க. அவருக்கு இந்தி, இங்கிலீஷ் தான் தெரியும். முக்கியமா இருந்தா மட்டும் கூப்பிடுங்க. இல்லைனா நான் இந்தியா வந்ததும் நானே கூப்பிடுறேன். எல்லாரையும் கேட்டன்னு சொல்லுங்க மச்சான். பை.’’ என்று மகிழன் அழைப்பை துண்டிக்க, மருதுவிற்கு தலை கால் புரியவில்லை.
முதன் முறையாக மகிழன் மருதுவை மச்சான் என்கிறான். ஏற்கனவே பூங்கொடியின் கணவன் என்று மருதுவிற்கு மகிழன் மேல் பிரியம் உண்டு. ஆனாலும் அவன் ஒட்டா தன்மைக் கண்டு மனதிற்குள் சிறு சுணக்கம் எப்போதும் உண்டு.
அவன் உலக அரங்கில் சாதிக்க அவன் மேல் மரியாதை வந்திருந்தது. அவனோ ‘மச்சான்’ என்று உறவிட்டு அழைக்க, மருதுவின் மனதில் பாசம் உடைப்பெடுத்த நீரூற்றாய் பொங்கி பிரவகிக்க தொடங்கியிருந்தது.
ஊரின் சார்பில் மரியாதை செய்யும் விழாவை கண்ணும் கருத்துமாய் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தவன், மேலும் காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு விழா ஏற்பாடுகளை கவனிக்க சென்றுவிட்டான்.
அந்த இடைவெளியில் மகிழன் சொன்ன அலைபேசி செய்தியை பூங்கொடியிடம் உரைக்க மறந்துவிட்டான்.
பூங்கொடி எங்கு சுற்றி வந்து நின்றாலும், நிமிடத்திற்கு ஒரு முறை மகிழனிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதா என்று அலைபேசியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
முழுதாய் 24 மணி நேரம் கடந்தும் அவனிடமிருந்து எவ்வித செய்தியும் இல்லாது போக, கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளுக்குள் வாட துவங்கினாள் .
“என்ன தான் பிசியா இருந்தாலும்... ஒரு மெசேஜ் அனுப்ப கூடவா நேரம் இருக்காது.’’ என மனசாட்சி அவளிடம் மல்லுக்கு நிற்க, இன்னொரு மனமோ, “முன்ன மாதிரியா இப்ப அவன் யானியாக்கும்..’’ என்று கொக்கலிக் கொட்டியது.
ஒருபுறம் வீட்டில் கூடும் உறவினர் கூட்டம், திருவிழா கண்டது போல, பாராட்டு விழாவிற்கு தயாராகும் ஊர், “யானி வைப் நீங்க தானே..’’ என்ற விசாரிப்போடு வாசலில் குவியும் செய்தியாளர் கூட்டம், இவற்றிக்கு மத்தியில் என்ன ஏதென்று புரியாத பயம் பூங்கொடியின் உள் மனதை அரிக்க துவங்கியிருந்தது.
‘யானிக்கு ஏத்தவளா நான் இருக்க மாட்டேனோ..? அதான் என்ன தவிர்க்க ஆரம்பிசிட்டாரோ..?’’ ஏதோதோ எண்ணங்கள் தம் போல உள்ளுக்குள் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தாலும், வந்தவர்கள் மத்தியில் உற்சாகமாய் இருப்பதை போலத் தான் காட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் வீட்டு ஆட்களுக்கும் அவள் முகம் பார்க்க நேரமின்றி ஆளுக்கு ஒரு வேலையென ஓடிக் கொண்டிருந்தனர். இத்தனை களேபரத்திலும் நிம்மதியாய் அவர்கள் வீட்டில் உண்டு உறங்கிய ஒரே ஆள் மூன்று மாத புது வரவு செந்தமிழன் மட்டும் தான்.
எப்போது வருவான் என பூங்கொடி பசலையில் கைவளை கழன்று வரும் அளவு மெலிய, அந்தப்பக்கம் யானியின் வரவு திட்டமிட்டபடி நிகழாமல் மேலும் மூன்று நாட்கள் தள்ளிப் போனது.
இரண்டு தங்கப்பதக்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கத்தோடு இந்திய வீரர்கள் தாயகம் திருப்ப, நாட்டின் பிரதம மந்திரியே அவர்களை நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அன்றைக்கு டெல்லியில் இரவில் நடந்த நட்சத்திர விருந்தில், கையில் மதுக் கோப்பையுடன் ப்ரணிதா ஒருபுறமும், மாயா ஒரு புறமும் நிற்க, மத்தியில் மகிழன் நின்றுக் கொண்டிருந்த காட்சி, அடுத்த நாள் காலையே செய்தி தாள்களில் வலம் வந்தது.
பாலிவுட் நட்சத்திர கதாநாயகி என்ற வகையில் மாயாவும், நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை என்ற வகையில் ப்ராணிதாவும் அந்த நிகழ்விற்கு வந்திருந்தனர்.
இயல்பாய் அவர்கள் மகிழனை பாராட்டிக் கொண்டிருந்த போது, ஊடகவியலாளர் எடுத்து புகைப்படமது. அவர், “மோஸ்ட் சார்மிங் பர்சன்.. வித் சார்மிங் பியூடீஸ்..’’ என்று தன் முக நூல் பக்கத்தில் பதிய, அந்த புகைப்படம் நொடியில் வைரலாகி, செய்தித்தாள் வரை வந்துவிட்டிருந்தது.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்த பூங்கொடிக்கு, இந்த புகைப்படம் வேறு வயிற்றில் அமிலக் கரைசலை ஊற்றி வைத்தது. “எனக்கு ஒரு மெசேஜ் பண்ண டைம் இல்ல... அங்க ரெண்டு பேருக்கு நடுவுல நின்னு கடலை வறுத்துட்டு இருக்காறா.. வரட்டும் பேசிக்கிறேன்..’’ என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுக்க துவங்கினாள்.
பாவம் அவளும் தான் என்ன செய்வான். பல முறை மகிழனின் அலைபேசிக்கு அழைத்துப் பார்த்தாள். அது அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் சொல்லி அவளை கடுப்பிற்குள் ஆழ்த்தியது.
அடுத்த இரண்டாம் நாள் சென்னை வந்தவனுக்கு அங்கு மாநில அளவிலான பாராட்டு விழா ஏற்பாடு செய்யபட்டிருக்க, அனைத்தையும் முடித்துக் கொண்டு அவன் தன் கொடியை தேடி கிளம்ப இரவாகிவிட்டிருந்தது.
அப்பொழுது தான் அவன் தன்னுடைய புது அலைபேசியை உயிர்ப்பித்து இருந்தான். பழைய தகவல்கள் அந்த அலைபேசியோடு விடை பெற்று இருக்க, முதல் காரியமாய் கொடிக்கு, “மாமா வந்துட்டே இருக்கேன் பொண்டாட்டி..!’’ என்று ஒரு தகவலை அனுப்ப முடிவு செய்தான்.
ஆனாலும் அவளிடம் சொல்லாமல் போய் நின்று அவளுக்கு ஆனந்த அதிர்சியை அளிக்க விரும்பினான்.
நள்ளிரவில் வாயில் மணி ஒலிக்க, முதலில் எழுந்தது கூடத்தில் படுத்திருந்த மருதுபாண்டி தான். வீட்டில் வேலை அதிகம் என்பதால் காஞ்சனையின் தாய் வந்திருந்தார் குழந்தையை பார்த்துக் கொள்ள.
மகளும் தாயும் தங்கள் அறையில் துயிலட்டும் என மருது கூடத்திற்கு வந்திருந்தான். ஆக முதலில் எழுந்தவன் அவனே.
‘இந்த நேரத்துல யாராயிருக்கும்’ என்ற சிந்தையோடே வெளிக் கதவின் சாவி தேடியெடுத்தவன் முற்றத்து விளக்குகளை ஒளிரவிட்டு வாயில் கதவை திறக்க, வெளி இரும்பு கதவிற்கு பின்னால் ஜெர்கின் உடையில் நின்றுக் கொண்டிருந்தவனை அவனுக்கு சரியாய் அடையாளம் தெரியவில்லை.
வாயிலை தாண்டி நடந்தபடியே, “யாருப்பா அது..?’’ என்று குரல் கொடுக்க, மச்சான் ஊரைக் கூட்டிக் காரியத்தை கெடுத்துவிடுவானோ என்று பயந்த மகிழன், “மச்சான் நான் தான். கொஞ்சம் கத்தாம வாங்க.’’ என்று மென் குரலில் இயம்ப, அடுத்த நொடி மருது வாயிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
“என்ன மாப்பிள்ளை நீங்க. இப்படியா சொல்லாம கொள்ளாம வருவீங்க. ஊரே உங்களை எதிர்பார்த்து தான் காத்திருக்கோம். நாளைக்கு மேள, தாளம் ஆட்டம் பாட்டம் எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க ஊருக்காரங்க. நீங்க சத்தமே போடாமா நடு ராத்திரி வீட்டு வாசல்ல வந்து நிக்குறீங்க.’’ என்று வேக வேகமாய் பேசிக் கொண்டே கதவை திறந்தான்.
“ஷப்பா... குடும்பத்துக்கே வாய் அதிகம் போல.’’ என்று மனதிற்குள் சலித்தவன், உள்ளே நுழைய, “இருங்க வீட்ல இருக்க எல்லாரையும் எழுப்புறேன். எல்லாரும் உங்களுக்காக தான் காத்துட்டு கிடக்காக.’’ என்றவன் உள்ளே நுழையும் முன்னே மகிழன் அவனை கட்டிப் பிடித்து தன் கைவளைவில் சிறை வைத்தான்.
மெதுவாய் அவன் காதின் ஓரம் குனிந்தவன், “மச்சான்... வெட்கத்தை விட்டு உங்ககிட்ட சொல்றேன். நான் என் பொண்டாட்டியை கண்ல பார்த்தே சரியா நாலு மாசம் பதிமூணு நாள் ஆச்சு. ரொம்ப ஏங்கிப் போய் வந்து இருக்கேன். தயவு செஞ்சி யாரையும் எழுப்பாம என்னை கொடி ரூம்கிட்ட கொண்டு போய் விடுங்க. அப்பதான் உங்களுக்குன்னு பாரின்ல இருந்து வாங்கிட்டு வந்த அயிட்டம் எல்லாம் காலையில ஒழுங்கா உங்க கையில கொடுப்பேன். சரியா. இப்ப வழ வழன்னு பேசாமா.. நேரா கொடி ரூம்கிட்ட போறோம்.. டீல் ஓகேயா..!’’ என்றுவிட்டு நடக்க, மருதுவிற்கு தான் கூச்சத்தில் உடல் நெளிந்து கொண்டிருந்தது.
இப்படி குறும்பு செய்யும் மகிழனை இப்பொழுது தான் பார்க்கிறான். பிறகு கொடியோடு சேர்ந்த நார் அல்லவா அவன்..! அதோடு அவன் அணைத்து பிடித்திருந்த விதமும், காதோடு இதழ் உரச பேசிய பேச்சும் பாவம் மருது ஏதோ புது மணப்பெண் போல திகைத்து திண்டாடித் தான் போய்விட்டான்.
என்ன தான் மருது இரண்டு ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து பிறந்திருந்தாலும் இதுவரை அவன் தோளில் யாரும் கை போட்டு பேசியதில்லை. அவன் சுபாவம் அப்படி. யாரையும் தன் வட்டத்திற்குள் எளிதில் அனுமதிக்கமாட்டான்.
பள்ளிப்படிப்பும் பாதியில் தடைபட அவனுக்கு அந்த வகையிலும் நண்பர்கள் என்று யாரும் இல்லை. தங்கமும், செந்தூரமும் இவனுக்கு மரியாதை கொடுத்து ஒதுங்கியே நிற்பர். அதிகம் ஒட்டுவது பூங்கொடி தான்.
அதுவும் உடம்பு சரியில்லாத நாட்களில் அவன் மடியில் தலை வைத்துப் படுப்பாள். சிறு வயது பழக்கம். மற்றபடி மனைவி என்ற ஒருத்தி வந்த பிறகே அதுவும் மூடிய அறைக்குள் மட்டுமே அவனின் நெருக்கம் இருக்கும்.
பொது வெளியில் எப்போதும் பத்து அடி இடைவெளி இருக்கும். ஒருவனின் வெளி உடைத்து அவன் அகம் நுழைகிறோம் என்ற எவ்வித எண்ணமுமின்றி மகிழன் முன்னால் நடந்து கொண்டிருக்க, “மாப்பிள்ளை...’’ என்று ரகசிய குரலில் அழைத்துக் கொண்டே மருது பின்னால் ஓடினான்.
“தங்கப்பிள்ள ரூம் இந்தப் பக்கம்..’’ என்று முன்னடத்தி சென்றவன், கதவு சற்றே உள்நோக்கி திறந்திருக்க, மகிழனுக்கு மிகவும் வசதியாய் போயிற்று.
அவன் மருதுவின் முகம் பார்க்க, “எங்க வீட்ல அறைக் கதவை அடைக்குற பழக்கம் கிடையாது. தனியா தூங்கும் போது..’’ என்று சேர்த்து சொல்ல, “தாங்க்ஸ் மச்சான்..’’ என்றவன், என்றவன் சற்றே எம்பி மருதுவின் கன்னத்தை எச்சில் செய்து விட்டு, அறைக்குள் நுழைந்து கதவடைக்க... ‘இதென்னடா எனக்கு வந்த சோதனை’ என்று மருது திகைத்து நின்றான்.
பிறகு தன் மண்டையில் தானே தட்டிக் கொண்டவன், ‘பாவம் மாப்பிள்ளை ரொம்பவே ஏங்கிப் போய் தான் வந்திருப்பார் போல. தங்கச்சிக்கு தர வேண்டியதை எல்லாம் எனக்கு கொடுத்துட்டு இருக்கார் ..’’ என்று எண்ணிக் கொண்டவனுக்கு ஏனோ உடனே காஞ்சனையை அணைத்துக் கொண்டு உறங்க வேண்டும் போல இருந்தது.
அறையில் அத்தை இருக்கிறார்கள் என்ற நிதர்சனம் உரைக்க, “உனக்கு இன்னைக்கு திண்ணை தாண்டா..’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் மீண்டும் கூடத்தில் வந்து படுத்துக் கொண்டான்.
வெகு நேரம் இரவு விழித்திருந்த பூங்கொடி அப்பொழுது தான் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். வெளிக் கதவின் அருகே ஏதோ அரவம் கேட்பது போல தோன்ற கனவென்று அதை ஒதுக்கி புரண்டு படுத்தாள்.
விடி விளக்கின் ஒளியில் பூங்கொடியின் உருவம் மகிழனுக்கு மிக நன்றாகவே தெரிய, அவள் அருகே சென்று சற்றே குனிந்தவன், நன்றாய் வலிக்கும் வண்ணம் அவள் கன்னத்தை கடித்தான்.
“ஆ...’’ என்படி வலியில் விழித்த பூங்கொடி, தனக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும், ஒரு நொடி நெகிழ்ந்து, பின் அவன் மேல் தனக்கிருந்த கோபம் நினைவிற்கு வர அவள் முறைக்க துவங்க, எதையும் கருத்தில் கொள்ளும் நிலையில் மகிழன் இல்லை.
“கொடி..’’ என்ற கொஞ்சல் மொழியோடு அவள் மேல் சரிந்தவன் தான். அவள் இதழ்களை விட்டால் தானே அவள் பேச, “அவள் இதழ்கள் விடுவிக்கப்பட்ட போது.. சூடான அவன் இதழ்கள் அவள் செவியின் அருகே சரசம் செய்தபடி, “உன் மாமா ஜெயிச்சிட்டேன் பூங்கொடி. யானியா ஜெயிச்சிட்டேன். சொல்லுடி.. மாமா ஜெயிச்சிட்டேன்னு சொல்லு..’’ என்று அவளை உந்த.. அவன் கரங்களில் சிக்கி நெகிழ்ந்துக் கொண்டிருந்த அவளோ... “ம்ம் ... ஜெயி.....ச்சி....டீங்க மா .. மா..’’ என்று குழறியடித்து அவன் தாகத்தை இன்னும் கூட்டினாள்.
அர்த்தம் புரியா உளறல்களும், குழறல்களும் அறையை நிறைத்திருக்க, முதல் கூடல் முடிந்த பின் பூங்கொடி மகிழனின் வேற்று மார்பில் சரிந்திருந்தாள்.
இதுவரை உள்ளதை அரித்து எடுத்த அத்தனை பயங்களும் சென்ற தடம் தெரியாமல் இருக்க, நன்றாக அவனை நெருங்கிப் படுத்தவள் வந்தவுடன் அவன் செய்தது போல வலுக் கொண்டு அவன் கன்னம் கடித்தாள்.
பூங்கொடியை போல அல்லாது, மகிழன், “ஆ...’’ என்று வேகமாய் கத்த, தன் கரம் கொண்டு அவன் வாய் மூடியவள், ‘எதுக்கு இப்படி உயிர் போற மாதிரி கத்துறீங்க. வீட்ல எல்லாரும் இருக்காங்க. அப்புறம் காலையில என்னை ஓட்டி எடுப்பாங்க.’’ என்று கவலை கொள்ள, ‘ஐ..இது நல்லா இருக்கே...’ என்று மனதிற்குள் எண்ணியவன், “சரி நான் கத்த மாட்டேன். ஆனா நீ நான் சொல்றது எல்லாம் கேக்கணும்.சரியா.’’ என்று மனைவியுடன் ஒரு புது ஒப்பந்தம் போட்டான்.
‘இது தான் சொந்தக் காசுல சூனியம் வச்சிகிறது போல..’ என்று மனதிற்குள் நொந்தவள், தலையை வெறுமனே ஆட்டி வைத்தாள்.
“மாமா.. உனக்கு சாணின்னு நான் சரியா பேர் வச்சி இருக்கேன். மாடு மாதிரி கனக்குற..’’ என்ற பூங்கொடி குற்றப் பத்திரிக்கை வாசிக்க அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை அவன்.
“தொட்டா உடஞ்சி போற குச்சி மாதிரி இருந்தா அப்படிதான். இனி நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து என் ஐஸ் குச்சி.’’ என்றவன் மீண்டும் அவளை ஆக்ரமிக்க, கொடி உல்லாசமாய் அவனுள் தொலைய துவங்கினாள்.
அடுத்த நாள் காலை வீட்டில் அனைவருமே வழக்கம் போல பூங்கொடியை வைத்து செய்தனர். வழமையாய் தந்தையின் அருகே ஓடி செல்பவள், அன்று மகிழனின் பின் சென்று மறைய, அவளை விட்டு நகர்ந்து சென்றவன், காஞ்சனையின் அருகில் நின்று,
“உங்க வீட்டு பொண்ணுக்கு நீங்க கறி வாங்கி தர மாட்டீங்களா. நேத்து கன்னா பின்னான்னு என் கன்னத்தை கடிச்சி வச்சிட்டா.’’ என்று சிறுவன் போல குற்றப் பத்திரிக்கை வாசிக்க, காஞ்சனை, “ஐயோ..’’ என்று வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டு மருதுவின் பின் சென்று ஒளிந்துக் கொண்டாள்.
அதுவரை அவளை கலாய்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வேலை இருப்பதை போல ஓடி ஒளிய, மகிழன் ‘எப்படி..’ என கண்களால் பூங்கொடியிடம் கேள்வி கேட்க, அவளோ, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..’’ என்று உதட்டை சுளித்து விட்டு நகர்ந்தாள்.
சுளித்த அவள் உதட்டையே பார்த்துக் கொண்டிருந்தவன், “சுளிக்கவா செய்யுற நைட்டு கடிக்கிறேன் இரு..’’ என்று ஜாடை காட்ட, பத்திரம் காட்டி விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.
சரியாய் காலை ஒன்பது மணிக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் மேள தாளத்தோடு பூங்கொடியின் வீடு தேடி வந்தனர்.
அனைவரும் அவனை அழைத்துக் கொண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம் நோக்கி செல்ல, வழிநெடுக பதினெட்டுபட்டி ஊர்க்காரர்களும் விழாவினை வேடிக்கை பார்க்க குவிந்திருந்தனர்.
முதலில் மேல் பக்கம் திறப்பு கொண்ட காரில் நின்றபடி கை அசைத்து வந்த மகிழன், மண்டபம் நெருங்கவும், இறங்கி நடக்க முனைந்தான். ஆனால் அதற்குள் எங்கிருந்தோ தங்க பாண்டியும், செந்தூரனும் ஓடி வந்து அவனை தங்களுடைய தோளில் தாங்கிக் கொண்டு ஊர்வலமாய் சென்றனர்.
அப்பழுக்கில்லாத அம்மக்களின் அன்பு அவன் நெஞ்சை மிகவும் நெகிழ்த்தியது. இந்த நான்கு நாட்களில் எத்தனையோ பாராட்டு விழாக்களை கண்டுவிட்டான். ஆனால் அவன் நெஞ்சை தொட்டது இவ்விழா தான்.
எக்ஸ் எம்.எல்.ஏ ஒருவர் விழாவினை துவங்கி வைக்க, பஞ்சாயத்து தலைவர் வாழ்த்துரை வழங்கி பேசினார். ஊரின் சார்பில் அவனுக்கு புதிதாய் ஒரு தங்க மெடல் செய்யப்பட்டிருக்க, அதை ஊரின் முக்கிய பிரமுகர்கள் இணைந்து அவனுக்கு அணிவித்தனர்.
அவன் பேச வேண்டிய நேரம் வர, கூடத்தில் ஒருத்தியாய் நின்றுக் கொண்டிருந்த பூங்கொடியை மேடைக்கு அழைத்தான். தன் கழுத்தில் இருந்த தங்க மெடலை அவள் கழுத்தில் அணிவித்தவன், “என்னோட இந்த வெற்றிக்கு காரணம்.... உங்க ஊர்ப் பொண்ணு தான். இவ இல்லைனா யானி மறுபடி பிறந்து இருக்கவே மாட்டான். ரொம்ப சாதாரண மகிழனாவே செத்துப் போயிருப்பான். உங்க அன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல. எனக்கு உங்களை எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.’’ அவன் அப்படி சொன்னதும் கூட்டத்தில் பயங்கர கரவொலி எழுந்தது.
இளசுகள் விசிலடிக்க, பெரியவர்கள் எழுந்து நின்று ஆசிர்வதித்தனர். அக்காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடியின் குடும்பத்தினர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பாராட்டு விழா முடியவும் மண்டபத்திலும், ஊரை அடைத்து பொது வெளியில் போட்டிருந்த பந்தலிலும் பந்தி தொடங்கியது.
தன் மூன்று மச்சான்களோடு, பூங்கொடியின் அண்ணிகளும் பம்பரமாய் சுழல்வதைக் கண்ட மகிழனின் மனம் உறவின் உன்னதத்தை உணர்ந்தது.
மாலை வரை விருந்து வேலைகள் இருக்க, உறவுக் கூட்டத்தை எல்லாம் வழி அனுப்பிவிட்டு, பூங்கொடியின் வீட்டு ஆட்கள் மட்டும் கூடத்தில் கூடி இருந்தனர்.
பூங்கொடியின் தந்தை ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, மற்ற மூன்று மகன்களும் நின்றுக் கொண்டிருந்தனர். வைசாலியும, காஞ்சனையும் கீழே அமர்ந்திருக்க, மகிழன் தான் வெளி ஊரிலிருந்து அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கடை பரப்பினான்.
வீட்டிலிருந்த அப்பத்தா முதல், புது வரவு செந்தமிழன் வரை ஒருவரையும் விடாது நினைவில் வைத்திருந்து அவர்கள் உபயோகிக்கும் வண்ணம் பரிசுப் பொருட்கள் தந்தான்.
அனைவருக்கும கொடுத்து முடித்த பின், பூங்கொடி தரையில் காலை உதைத்து சிணுங்கிக் கொண்டே, ‘எனக்கு ஒன்னும் இல்லையா..’’ என்று வினவ, “உனக்கு தான் மாமா நான் முழுசா இருக்கேனா.. ஓடி வா.. வந்து எடுத்துக்கோடி ஐஸ் குச்சி..’’ என வார.. வழமையாய் அவளுக்காய் குரல் கொடுக்கும் அவள் தந்தையும் அனைவரோடும் இணைந்து சிரித்தார்.
அன்றைக்கு இரவில் பண்ணை வீட்டில் மச்சான்களோடு தண்ணி கச்சேரி களை கட்டியது. இதற்கு முன் சகோதரர்கள் மூவரும் ஒன்றாய் அமர்ந்து குடித்தது எல்லாம் இல்லை. எல்லாம் மற்றவர் அறியாமல் அளவோடு தனி தனியே குடிப்பார்கள் அவ்வளவே.
அதிலும் செந்தூரனுக்கு மருது என்றால் பயம் அதிகம். மகிழன் தான் “வாங்க மச்சான்ஸ்.. இன்னைக்கு பாரின் சரக்கோட செலிபிரேட் பண்ணுவோம்.’’ என்று மூவரையும் ஒரே இடத்தில் கூட்டியிருந்தான்.
மகிழனிடம் மறுத்து பேச முடியாத மூவரும் வேறு வழியின்றி ஒன்று கூடியிருந்தனர். இவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் இரண்டு ரவுன்ட் முடியும் வரை மட்டும் தான்.
இரண்டு ரவுன்ட் முடிந்ததும், முதலில் மருது எழுந்து நின்று, “மாப்பிள்ளை.. ஐ.. லவ் யூ..’’ என்று பிரகாஷ்ராஜ் பாணியில் சொல்ல, “சரியா சொன்னணே..” என்று பின்பாட்டு பாடிக் கொண்டு மற்ற இருவரும் எழுந்து நின்றனர்.
அதன் பிறகு மகிழன் மட்டும் நிற்பான என்ன..? தானும் எழுந்து நின்றவன், “டேய்.. கடைசி மச்சான் உனக்கு என் பூங்கொடி கண்ணு..” என்று அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட, அவனும், “ஐ டூ லவ் யூ மச்சான்..’’ என்று மகிழனை கொஞ்சினான்.
“மாப்பிள்ளை அவன் கண்ணு மட்டும் தான் தங்கச்சி மாதிரி. பய புள்ளைக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல. நீங்க இப்படி வந்து உக்காருங்க.’’ என்று மகிழனை வாரியபடி, பொறுப்பாய் தங்க பாண்டி அவனை அருகிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.
“நீ கொஞ்சம் கூட பூங்கொடி மாதிரியே இல்ல. ஆனாலும் ஐ லவ் யூ மச்சான்..’’ என்று தங்க பாண்டி கன்னத்திலும் மகிழன் முத்தம் வைக்க, அடுத்து தான் தான் என்பதை உணர்ந்த மருது, இரு கரத்தாலும் கன்னங்களை மூடிக் கொண்டவன்,
“டேய் மாப்பிள்ளை.. ஆளை விடுறா சாமி. என் பொண்டாட்டி பிள்ளை பெத்தே மூணு மாசம் தான் ஆகுது. டாக்டர் முழுசா அஞ்சி மாசம் கிட்ட போகவே கூடாதுன்னு சொல்லி இருக்காக. அத்தை வேற ஊர்ல இருந்து வந்து இருக்கு. என்னை கிளப்பிவிட்டு என் தூக்கத்தை கெடுத்துடாத சாமி..’’ என்று கெஞ்ச, மற்ற தனையன்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
மருது இப்படி அவர்கள் முன் இலகுவாய் பேசுவது இது தான் முதல் முறை. கொஞ்ச நேரம் அவர்களோடு மகிழ்வாய் வாயடித்தவன், நேரம் பத்தை காட்டவும், “சரி மச்சான்ஸ்.. மிச்சம் மீதி இருக்க சரக்கையெல்லாம் நீங்க வயித்துல சரிச்சிட்டு இங்கயே தூங்கினாலும் சரி.. இல்ல வீட்டுக்கு வந்தாலும் சரி..நான் கிளம்புறேன். என் ஐஸ் குச்சி வையிடிங்’’ என்று எழுந்து கொண்டான்.
அவன் கிளம்புகிறேன் என்றதும், செந்தூரன் எழுந்து கொண்டான். அவன் தான் தான் வண்டி ஓட்ட நேரும் என்பதால் அளவோடு குடித்திருந்தான். தம்பியை பார்த்த மருது, “பார்த்துப் போடா சின்னவனே... பத்திரம்..’’ என்றதோடு கார் வரை வந்து இருவரையும் வழி அனுப்பி வைத்தான்.
வாழ்வில் முதல் முறையாக அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாய் குடித்துவிட்டு, ஒரே போர்வையில் உறங்க துவங்கினர்.
வீட்டை அடைந்ததும், செந்தூரன் சிறிய குரலில், “மாப்பிள்ளை.. வீட்ல எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க.. மெதுவா உள்ள போகணும். அதுவும் அப்பா ரூம்ல முழிச்சிட்டு இருந்தார்னா செத்தோம். அப்புறம் முக்கியமா ஹால்ல தூங்குற கிழவி கண்ணுல படவே கூடாது. சரியா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திரும். சத்தம் போடமா கொடி ரூமுக்கு போயிடுங்க. நான் என்னோட ரூமுக்கு போறேன்.’’ என்றவன் கூடத்திற்கு பக்கவாட்டில் இருந்த தென்னை மரத்தில் ஏறி, அங்கிருந்த திட்டின் வழியே ஜன்னலை திறந்து அரை நொடிக்குள், தன் அறைக்குள் மாயமானான்.
‘அடப்பாவி மச்சான்.. என்ன தனியா கோர்த்துவிட்டுட்டு ஒடிட்டானே..’ என்று மனதிற்குள் செந்தூரனை அர்ச்சித்தவன், பூனை நடை வைத்து மெதுவாய் வீட்டிற்குள் நுழைய, “வந்துடீங்களா மாப்பிள்ளை’’ என்ற பூங்கொடியின் தந்தை குரல் அவனை அப்படியே தேக்கியது.
வாயில் சர்க்கரை அள்ளிப் போட்டு அம்மாவிடம் மாட்டிய சிறுவன் போல மகிழன், “மாமா..’’ என்று மெதுவாக அழைக்க, “பண்ணை வீடு போனீங்கன்னு தெரியும். என்ன செய்ய இதெல்லாம் இந்த காலத்துல ஒரு பேசன் மாதிரியாகிப் போச்சு. ஏதோ ஒரு நாள் தப்பில்ல. நீங்க பெரிய விளையாட்டு ஆளு. உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. உடம்பு பத்திரம் மாப்பிள்ளை. ‘’ என்றவர் தன் அறை நோக்கி நடக்க, மகிழனுக்கு அவரின் அக்கறை கூட பிடித்திருந்தது.
தனிமை வாய்க்கும் போது பூங்கொடி அவனோடு சண்டையிடவே எண்ணியிருந்தாள். ஆனால் காலையில் நடந்த நிகழ்வுக்க அவள் மனதினை மாற்றியிருந்தது.
நேற்றைக்கு போல ஆவேசம் ஏதுமின்றி.. சிலை வடிக்கும் சிற்பியாய், வீணை வாசிக்கும் கலைஞனாய் அவன் அவள் மென்னுடலை மீட்ட, பூங்கொடி மகிழனுள் மூழ்கினாள்.
முழுதாய் கலைந்தவள், அவள் வேற்று மார்பில் சரிந்தபடி, “எவ்ளோ பணம் மாமா. அவ்வளவும் வச்சி என்ன செய்யப் போறீங்க.’’ என கேட்டாள்.
ஆம் அவனுக்கு தொகையாய் பொருளாய் வந்த பரிசுகள் மட்டும் சில கோடிகளை தாண்டியிருந்தது.
அவள் உச்சந்தலையில் தன் தாடையை பதித்தவன், “ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆரம்பிக்கப் போறேன் கொடி. அக்னி சிறகுகள் ஸ்போர்ட்ஸ் அகாடமி. என்னை மாதிரி எத்தனை பேர்... எத்தனை குழந்தைங்க... அவங்க உடல் ஊனத்தை நினச்சி சமூகம் அப்படிங்கிற வெளிச்சத்தை பார்க்க பயந்து... நாலு சுவர்ங்கிற இருட்டுகுள்ள இருப்பாங்க. அவங்களை எல்லாம் வெளிய கொண்டு வரணும் . அவங்ககிட்ட என்ன திறமை இருக்குன்னு கண்டு பிடிச்சி அவங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டனும். நான் வாங்கி வந்தது ஒரு கோல்ட் மெடல் தான் கொடி. இனி என் கனவு எல்லாம்... ஒவ்வொரு பேரா ஒலிம்பிக்ஸ்லையும், இந்தியாவுக்கு தங்கத்தை மொத்தமா அள்ளனும். இது இப்போதைக்கு என் கனவு தான். நிஜமாகுமா பூங்கொடி.’’ என தன் மறுபதியானவளின் முகம் பார்த்தான்.
அவன் விழித்திரையில் எதிரொலித்த கனவுகளை தன் கரு விழியில் பிரதிபலித்தவள், “கண்டிப்பா மாமா, உங்க கனவு நிறைவேற... நானும் உங்களோட கை கோர்த்து நிற்பேன்.’’ என்றவள் அவன் கரங்களை இறுக்கிக் கொண்டாள்.
“சரி தான்.. அப்ப... இனிமே நமக்கு நிறைய வேலை வந்துடும் பூங்கொடி. சோ.. இப்ப கிடைச்ச டைம்ல நாம கொஞ்சம் லவ் பண்ணிக்கலாம்.’’ என்றவன் மீண்டும் அவளிடம் தன் சரசத்தை துவங்க, வெளியே மழை தன் பூமிக் காதலியிடம் சாரலாகி சரசத்தை துவங்கியிருந்தது.
மழை பொழிந்தது.
Arumaiyana story.
ReplyDeleteமீனு அசத்தல் கதை.... மீண்டு வந்த யாணி தன்னோட சேர்த்து இன்னும் பல யாணிக்களை உருவாக்க நினைத்து ஆரம்பிக்கும் அக்னி சிறகு கள் அவனின் கனவுகளை நிறைவேற்றும் .....
ReplyDeleteசின்னதா முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு..சூப்பர்...யானியாய் நிமிர்ந்த மகழின் பூவுக்குள் சரண் புகுதல்...
ReplyDeleteமச்சாங்களிடம் ரவுசுனு செம்மயா முடிஞ்சது..
Super mam romba romba super nice fantastic super super super mam thank you soooooooooooo much, eagerly waiting for next one
ReplyDeleteSuperb sema beautiful ending shani yani aayitaan credit goes to poovu . He get back his self confidence and win the contest super
ReplyDeleteSuper ma..
ReplyDeletesuperrrr, but its very short, we like to more.
ReplyDelete